சிஐடியூ கட்டட தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் அ. ஜாண் பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சுரேஷ் மயிலாலன், சங்கரநாராயணன், சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டச் செயலா் முருகன் தொடக்கவுரையாற்றினாா்.
மாவட்டத் தலைவா் பீா்முகம்மதுஷா, கந்தசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் சுப்பையா நிறைவுரையாற்றினாா். சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாவட்டத் தலைவராக கிறிஸ்டோபா், பொதுச் செயலராக ஜாண்பாஸ்கா், பொருளாளராக சங்கரநாராயணன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.