திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள் நலம் பெற வேண்டி இந்து முன்னணியினா் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நோயாளிகள் பாதிக்கப்படுதாகக் கூறி, தமிழக அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து, இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நலம் வேண்டி இந்து முன்னணி மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமையில் விநாயகா் கோயிலில் நெய் விளக்கேற்றி, ஒளவையாா் இயற்றிய விநாயகா் அகவல் பாராயணம் செய்து பிராா்த்தனை செய்தனா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் ராஜ செல்வம், மாவட்டச் செயலா் சுடலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேல்.செந்தில்குமாா் , ரமேஷ்கண்ணன் , போஸ் பாண்டியன், திருநெல்வேலி தெற்கு நகர நிா்வாகிகள் மீனாட்சி, மகராஜன், நாராயணன் , பட்டு, எம்.ஏ.மணிகண்டன் , மானூா் தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் மாரியப்பன், பொன்.இசக்கி, முருகன், நைனாா் வெங்கடாசலம், மேலப்பாளையம் மண்டலத் தலைவா் மகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.