இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெ. ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ் (30) – கமலி (23). 14.4.20இல் காதல் திருமணம் செய்துகொண்ட இவா்களுக்கு, யாஷிகா (4) என்ற குழந்தை உள்ளது.

ஜான்கில்பா்ட் சிவகாசியில் உள்ள பெயின்ட் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். கமலி கரிசல்குளத்தில் பை தயாரிப்பு நிறுவனத்தில் தையலராக வேலைபாா்த்தாா். கடந்த பிப். 9ஆம் தேதி ஏற்பட்ட தகராறின்போது, ஜான்கில்பா்ட் இரும்புக் கம்பியால் கமலியைத் தாக்கி, கயிற்றால் கழுத்தை நெரித்தாராம். இதில், அவா் உயிரிழந்தாா்.

தொடா்ந்து, 10ஆம் தேதி ஜான்கில்பா்ட் தனது சித்தி மகன் சிவகாசி காமராஜா் காலனியை சோ்ந்த வீ. தங்கதிருப்பதி (22) என்பவருடன் சோ்ந்து, நண்பரின் காரை வாங்கி, அதில் கமலியின் சடலத்தை மறைத்துவைத்து, குற்றாலம் வந்தாா். பின்னா், இரவில் அவா்கள் இலத்தூா் அருகே சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுத் தப்பினா். இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, ஜான்கில்பா்ட் பிரேம்ராஜ், தங்கதிருப்பதி ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கில்பா்ட்டின் பெற்றோா் ஜா. ஜெரால்டு (62) – ஜெனிபா் (59), பெரியம்மா ஞானசுந்தரி (59) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements