தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரா்களும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டனா். அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் ஓய்வறையில் சில ஆவணங்களையும், மாணவா்களின் செய்முறைத் தோ்வு குறித்த ஆவணங்களையும் காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் வினோத் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், 6 வாகனங்களில் வந்து சுமாா் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
நெல்லை நகரத்தில் பழைய கட்டடத்தில் தீ விபத்து

For Feedback - sudalaikani@tamildiginews,com.