புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

இது தொடா்பாக களக்காடு வனச் சரகா் பிரபாகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: களக்காடு வனச்சரகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பிப்.24 முதல் மாா்ச் 2ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, களக்காடு தலையணை சூழல் சுற்றுலா வனச் சோதனைச் சாவடி மூடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள்தலையணைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements