Uttar Pradesh; Nizampur; Ramkeval; school 10th; உத்தரப்பிரதேசத்தின் நிஜாம்பூர் கிராமத்தில் 78 ஆண்டுகளில் முதல்முறையாக 10-ம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

By
On:
Follow Us

மதத்தின் பெயரில், சாதியின் பெயரால், மொழியின் பெயரால், பாலினத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சக மனிதனுக்கெதிராக இன்னொரு சக மனிதனை முன்னிறுத்தித் துண்டாடப்பட்டிருக்கும் சமூகத்தை, வேற்றுமை களைந்த அறிவார்ந்த சமூகமாக, அனைத்து தரப்பினரையும் சமமாக மதிக்கும் சமூகமாக மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே.

கல்வியின்பால் ஒருவர் அடையும் உச்சம் என்பது எந்தவொரு பொருளாதார உச்சத்தாலும் சமன் செய்ய முடியாதது.

அதனால்தான், பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்காமல், சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற அளவுகோலை வைத்து இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.

ஆனால், அதில் இப்போது பொருளாதாரம் என்ற அளவுகோலையும் கொண்டுவந்துவிட்டார்கள்.

அடுத்ததாக, பள்ளிக் கல்வி தேர்வு முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து, குழந்தைப் பருவத்திலேயே இவர்களுக்குப் படிப்பு வராது என்று ஃபில்டர் செய்யும் வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய மாற்றங்கள் எதுவும் அறியாத ஒரு குக்கிராமத்தின் நூற்றாண்டுக் கனவை 10-ம் வகுப்பு மாணவன் இன்று நிறைவேற்றியிருக்கிறார்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements